×

திருவாரூர் சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜூலை23: சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற இந்திய தேசிய மாதர் சம்மேளன பேரவையில் வலியுறுத்தப்பட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய தேசியமாதர் தேசிய சம்மேளனம் நகர 11-வது ஆண்டு பேரவைகூட்டம் நடைபெற்றது. மாவட்டதலைவர் லட்சுமி தலைமைவகித்தார், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைத் தலைவர் குருமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதைவலியுறுத்திதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...