×

ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 23: நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் நேற்று நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நியாயவிலை கடைகளுக்கென தனித்துறை ஏற்படுத்த வேண்டும், நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களை பொட்டலங்களாக வழங்கப்படும் வழங்க வேண்டும், பணிவரன் முறைபடுத்தாத பணியாளர்களை பணிவரன் முறைபடுத்த வேண்டும், கோரிக்கைகள் குறித்து ஐவர் குழு கமிட்டி அளித்துள்ள அறிக்கையினை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு