×

செயல்வீரர் கூட்டத்தில் முடிவு குழந்தை இல்லாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருவாரூர், ஜூலை 23: திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ரஜினி (38). கட்டிட தொழிலாளி. இவருக்கு பாரதி (30) என்பவருடன் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 19ம் தேதி வழக்கம்போல் தகராறு ஏற்படவே மனமுடைந்த ரஜினி பூச்சி மருந்தை குடித்தார்.பின்னர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்