×

100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்த மக்கள் கோரிக்கை

வலங்கைமான், ஜூலை 23: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஊரட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த உணவுத்துறை அமைச்சரிடம் நூறுநாள் வேலையை நூற்று ஐம்பது நாளாக உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஊராட்சியில் நிலத்தடிநீர் செறியூட்டல் நிகழ்ச்சியை துவக்கிவைக்க வந்துத உணவுத்துறை அமைச்சரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நூறுநாள் பணியாளர்கள் சந்தித்தனர். அப்போது நூறுநாள் வேலையில் காலதாமதமாக ஊதியம் வழங்கப்படுவதாகவும், அரசு நூறு நாள் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 229 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊதியம் குறைத்து வழங்கப்படுவதாகவும் நாள் ஒன்றுக்கு குறைந்தது இருநூறு ரூபாயாவது வழங்கவேண்டும் என்றும் மேலும் நூறுநாள் வேலையை நூற்று ஐம்பது நாளாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...