×

பட்டுக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை, ஜூலை 23: பட்டுக்கோட்டை பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டுமென ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற உறுப்பினர்களுக்கு காப்பீடு திட்ட அட்டைகளை வழங்க வேண்டும். பட்டுக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதையில் முதலில் தினசரி பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். அதைதொடர்ந்து சென்னை- ராமேஸ்வரம் இடையே பட்டுக்கோட்டை- காரைக்குடி வழியாக ரயில் போக்குவரத்து செல்ல ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் மோகன்தாஸ், இணை செயலாளர் பொன்முடி, பொருளாளர் சிவசாமி, ஜோதி, முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா