10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும்

கும்பகோணம், ஜூலை 23: பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பொதுப்பணித்துறை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு நீர்ப்பாசன தொழிலாளர் யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன தொழிலாளர்கள் யூனியன் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, கந்தசாமி, பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின்போது பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கு மேல் வேலை செய்து வரும் பணியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 6வது ஊதிய ஒப்பந்தப்படி 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: