×

30 நாட்களில் முடிவடையும் லாரி- வேன் மோதலில் 9 பேர் காயம்

திருவையாறு, ஜூலை 23: திருவையாறு அந்தணர்குறிச்சி அடைக்கலம் காத்த அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜா, இவது வீட்டு விசேஷத்துக்காக உறவினர்களான கரம்பையம் மற்றும் ஒரத்தநாட்டை சேர்ந்த சதாசிவம் (77), கார்த்திகேயன் (37), ரங்கசாமி (55), தனலட்சுமி (44), வசந்தா (55), சித்ராதேவி (33), சின்னம்மாள் (65), காந்திமதி (60) நகுல் (10) ஆகிய 9 பேர் உட்பட 20 பேர் ஒரு வேனில் புறப்பட்டு திருவையாறுக்கு வந்தனர். மணக்கரம்பை பைபாஸ் மெயின்ரோட்டில் வரும்போது வேன் முன்பு லாரி சென்றது. அப்போது மெயின்ரோட்டில் மாடு ஒன்று ரோட்டை கடக்க முயன்றது. அப்போது லாரியை திடீரென பிரேக் பிடித்து டிரைவர் நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த வேன், லாரி மீது மோதியது. வேனில் பயணம் செய்த மேற்கண்ட 9 பேர் காயமடைந்தனர். இதையடுத்து 9 பேரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்