ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்

பாபநாசம், ஜூலை 23: பாபநாசத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. சுப்பு.தங்கராசு தலைமை வகித்தார். செயலாளர் துரைசாமி வரவேற்றார். பொருளாளர் சண்முகம் வரவு செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெற்றார். கூட்டத்தில் ஓய்வூதியருக்கு வருமான வரிவிலக்கு அளிக்க வேண்டும். நீட், நெஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அன்னுக்குடி, அரையபுரம், திருப்பாலத்துறை, கோபுராஜபுரம், பாபநாசம் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: