தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல் தொழிலாளி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 23: திருக்காட்டுப்பள்ளி அடுத்த அகரப்பேட்டை மணல்மேட்டு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (55). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 19ம் தேதி மது குடித்து விட்டு வந்த கணவனை அவரது மனைவி ராணி (50) கண்டித்தார். இதில் மனமுடைந்த திருநாவுக்கரசு, மதுவில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து குடித்தார். ஆபத்தான நிலையில் திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் ராணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: