லோடு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 23: அகரப்பேட்டை சாலையில் லோடு ஆட்டோ மோதி நடந்து சென்ற தொழிலாளி பலியானார். திருக்காட்டுப்பள்ளி அடுத்த அகரப்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (55). செங்கல் காளவாயில் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக திருக்காட்டுப்பள்ளி- தோகூர் சாலையில் காமராஜர் காலனி நோக்கி நடந்து சென்றார். அப்போது தோகூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி ஒன்பத்துவேலி குயவன்சந்து நந்தகுமார் (40) ஓட்டி வந்த லோடு ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி மனைவி வசந்தா (45) புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: