×

பொன்னமராவதி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா

பொன்னமராவதி, ஜூலை 23: பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் அமரன் மாண்டான் கரை, சிவன் கோயில் திடல், அடக்கண் ஊரணி உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வேம்பு, வாகை, புங்கை, பாதாம், நாவல் உள்ளிட்ட மரங்களை நட்டு அதை பாதுகாப்பு கவச வேலியுடன் வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது.மேலும் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், 9 வது வார்டு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ராஜா, பேரூராட்சி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி பார்...