×

க.கோட்ைட- குரும்பூண்டி இடையே அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் மா. கம்யூ. வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை, ஜூலை 23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து குரும்பூண்டி ஊராட்சிக்கு அரசு நகர பேருந்து இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.கந்தர்வகோட்டை அடுத்த குரும்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை அரசியல் விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. கோரிக்கைகளை விளக்கி ஒன்றிய செயலாளர் ரெத்தினவேல், வட்டக்குழு உறுப்பினர்கள் மணி, இளையராஜா, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.குரும்பூண்டி ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடையில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும். கந்தர்வகோட்டையிலிருந்து குரும்பூண்டி ஊராட்சிக்கு அரசு நகர பேருந்து இயக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு