×

மயிலாடுதுறை அருகே திருட்டு லாரியுடன் ஓராண்டாக தலைமறைவானவர் கைது

மயிலாடுதுறை, ஜூலை 23: மயிலாடுதுறை அருகே திருட்டு லாரியுடன் ஓராண்டாக தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள. அருண்மொழிதேவன் , மணலூர் கீழத்தெரு சிதம்பரம் மகன் சாமிநாதன், (61) என்பவருக்கு சொந்தமான தச்சர் லாரியை மயிலாடுதுறை அடுத்த மறையூர் தாமரைக்குளத்தில் மாணிக்கங்கள் மகன் மாரிமுத்து (52) விடம் வாடகைக்கு கொடுத்து ஓட்ட சொல்லியுள்ளார். மறையூரில் வைத்து ஓட்டி வந்த மாரிமுத்து கடந்த 14.9.2018 தேதி லாரியுடன் தலைமறைவாகி விட்டார். லாரி உரிமையாளர் சாமிநாதன் புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில், சென்னை மற்றும் பல பகுதிகளில் லாரியை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு நேற்று அதிகாலை மயிலாடுதுறை பகுதிக்கு லோடு இறக்க வந்துவிட்டு திருவாலங்காடு சோதனை சாவடி வழியாக சென்றார். அப்போது குத்தாலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையின்போது சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், லாரியை கண்டுபிடித்தும் மேற்படி மாரிமுத்துவை கைது செய்தும் லாரியை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...