×

நாகை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தல்

கீழ்வேளூர், ஜூலை 23 :நாகை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க பாமக வலியுறுத்தி உள்ளது.நாகை தெற்கு மாவட்ட பாமக பொது குழு கூட்டம் கீழ்வேளூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் முகுந்தன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணை அமைப்பு தலைமை சொக்கலிஙகம், மாவட்ட இளம் பெண்கள் சங்க செயலாளர் நந்தினி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், அசோக், அரவிந்த், பண்டித்துரை, அர்ஜுன், குணசீலன், ரூபராஜ், நவீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:கட்சியில் சிறிதும் அக்கறை இல்லாமல் கட்சியினர் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில்கலந்து கொள்ள கூடாது என்று அனைவரையும் தடுக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைக்கு பரிந்துரைப்பது, டெல்டா விவசாய மக்களை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் அன்புமணியின் கரங்களைவலுப்படுத்துவது, நாகை மாவட்ட அரசு மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுவதற்கு அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...