×

சீர்காழியில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ரதம் துவக்கம்

சீர்காழி, ஜூலை 23: சீர்காழி அருகே சட்டநாதபுரம் கை காட்டி ரவுண்டானாவில் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர் வள பாதுகாப்பு இயக்கம் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ரதம் தொடக்க விழா நடைபெற்றது. சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் தலைமை வகித்தார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினா ராணி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பாரதி மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ரதத்தை தொடங்கி வைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வீடுகள் கடைகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.பேரணியில் பெஸ்ட் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் எம்எல்ஏ பூராசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜமாணிக்கம், போகர் ரவி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...