×

கீழ்வேளூர் அருகே மாரியம்மன் கோயில் கூரை தீயில் நாசம் சதி வேலையா? போலீஸ் விசாரணை

கீழ்வேளூர், ஜூலை 23: கீழ்வேளுர் அருகே மாரியம்மன் கோயில் கூரை தீயில் நாசமானது.நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வடக்கு புத்தமங்கலத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. ஓட்டு கட்டிடத்தில் இருந்த மாரியம்மன் கோயிலை இடித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கோயிலின் கீழ் மட்டத்தில் சுவர் எடுக்கப்பட்டு தற்போது கட்டுமான பணி நடைபெற இருந்த நிலையில், கோயிலின் மேல் பகுதி கீற்றால் கூரை போடப்பட்டுள்ளது. தற்போது கோயில் அப்பகுதி மக்கள் பராமரிப்பில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் (21ம் தேதி) இரவு கோயில் கீற்றால் வேயப்பட்ட கூரை திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் கூரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏதேனும் சதி வேலை உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...