×

தாந்தோணிமலை- கணபதிபாளையம் இடையே குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் திணறல்

கரூர், ஜூலை 23: குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் தாந்தோணிமலையில் இருந்து கணபதிபாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தாந்தோணிமலையில் இருந்து காந்திகிராமம் செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. கணபதிபாளையத்தில் உள்ள பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. குறுகிய தெரு சாலைகள் புதிதாக போடப்பட்ட நிலையில் மெயின்ரோட்டை அப்படியே விட்டுவிட்டனர். போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையையும் சீரமைக்காததால் பல்லாங்குழி சாலையாக மாறிவிட்டது. கல்லும் மண்ணுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்று வருகின்றனர். சாலைகளை சீரமைக்கும்போது முக்கிய சாலைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சாலைகளை தேர்வு செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...