×

பெண் உள்பட 2 பேர் நியமனம் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

கரூர், ஜூலை 23: இளைஞர் நீதிக்குழும உறுப்பினருக்கு விண்ணப்பங்களை அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நீதிக்குழுமத்திற்கு ஒரு சமூக நல உறுப்பினர் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு பெண் உள்பட 2 உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும், இருக்க வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்காக அமைந்த படிவத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சாமி வளாகம், ஆர்டிஓ அலுவலம் எதிரில், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்) என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...