×

கரூர் அருகே பெண் கழுத்தறுத்து கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

க.பரமத்தி, ஜூலை 23: கரூரை அடுத்துள்ள தென்னிலை அருகே கழுத்தை அறுத்து கொலையான பெண் குறித்து விசாரிக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.க.பரமத்தி அடுத்த தென்னிலை கிழக்கு ஊராட்சிக்கு கிடைக்காரன்பாளையம் பகுதியில் இருந்து சீலம்பட்டி செல்லும் தார்சாலையில் நத்தகாடு அருகே சாலையோரம் பெண் இறந்து கிடந்தது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அங்கு 35 வயது முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது யாரேனும் கூட்டி வந்து உல்லாசமாக இருந்து விட்டு தகராறில் கழுத்தை அறுத்து கொலை செய்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை செய்ய மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் க.பரமத்தி இன்பெக்டர் சிவக்குமார் தலைமையில் எஸ்ஐ ரங்கநாதன் மற்றும் போலீசார் கொண்ட ஒரு குழுவும், அரவக்குறிச்சி இன்பெக்டர் திருமேனி தலைமையில் போலீசார் கொண்ட 2வது குழுவும், அரவக்குறிச்சி டிஎஸ்பி (பொ) சுப்பிரமணி தலைமையில் போலீசார் அடங்கிய 3வது குழுவும் அமைக்கப்பட்டு கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிகளில் இரவு பகலாக கொல்லப்பட்ட பெண் யார், அவரை கொன்றது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்