×

தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு நிவாரணம்

சிவகிரி, ஜூலை 23:  வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் புதுக்கிராமம் தெருவில் வசிப்பவர் சோமசுந்தரம் மனைவி குருவம்மாள் (60). இவரது கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதே பகுதியில் உள்ள பரமசிவன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 20ம் தேதி மதியம் குருவம்மாள், வெளியே சென்றிருந்தபோது மின்கசிவு காரணமாக அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் குருவம்மாளின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ரூ.4 ஆயிரம் ரொக்கம், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த மனோகரன் எம்எல்ஏ, சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஆறுதல் கூறினார். மேலும் சொந்த பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் மூர்த்திப்பாண்டியன், ராயகிரி பேரூர் துணை செயலாளர் சேவகப்பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சீமான் மணிகண்டன், மாணவரணி ஒன்றிய இணை செயலாளர் சுமன், ஊராட்சி செயலாளர் கணேசன், கிளை செயலாளர் மாடசாமி, எம்எல்ஏ நேர்முக உதவியாளர் செம்புலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது