×

கால்வாய் பாலம் அமைக்க கோரி மனு

நெல்லை, ஜூலை 23: கீழப்பாவூர் அருகே உள்ள வினைதீர்த்தான் நாடார்பட்டியை ேசர்ந்த காசிப்பாண்டியன் உள்ளிட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், வார்டு எண் 1ல் உள்ள குடியிருப்புதாரர்கள் மழைநீர் கால்வாயை கடந்து சென்றே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதனால் பல சிரமங்கள் உள்ளன. பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. எனவே இப்பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி