×

காடன்குளம் சிவன் பார்வதி அம்மன் கோயில் கொடைவிழா

நெல்லை, ஜூலை 23:  காடன்குளம் சிவன் பார்வதி அம்மன் கோயில் கொடைவிழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு மாக்காப்பு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை நடந்தது. கொடைவிழாவான இன்று (23ம் தேதி) காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தல், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு படைப்பு பூஜை, 1 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. தொடர்ந்து நாளை (புதன்) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதல், சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரெங்கநாதன் பண்ணையார், முத்துகிருஷ்ணன் பண்ணையார், சுப்புராமன் பண்ணையார், ரமேஷ் பண்ணையார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் காடன்குளம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags :
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது