×

மானூர் அருகே சாலையில் அறுந்து தொங்கும் மின்கம்பியால் விபத்து அபாயம்

மானூர், ஜூலை 23:  மானூர் அருகே சாலையில் அறுந்து தொங்கும்  மின்கம்பியால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன் அதனை சரிசெய்ய அப்பகுதியினர்  கோரிக்கை விடுத்துள்ளனர். மானூர் அருகேயுள்ள ராமசாமியாபுரம் செல்லும் சாலையில் மாவடி எஸ்.எஸ் 3 மின்மாற்றியில் இருந்து  செல்லும் மின்பாதை கம்பியை மின்சார கம்பத்தில் தாங்கி நிற்கும்  இன்சுலேட்டர் உடைந்து தலை தட்டும் அளவுக்கு தொங்குகிறது.  அருகாமையில் கட்டப்பட்ட பிவிசி பைப் உதவியால்  தொங்கிக் கொண்டிருக்கிறது. மின்கம்பி எந்த நேரமும் தரையில் விழும் அபாயத்தில் உள்ளது. அப்பகுதி கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் அருகில் குளம்  இருப்பதால்  விவசாயத்திற்கு செல்வோர், கால்நடைகள் மேய்ப்போர் செல்லும்  பாதையாகவும் உள்ளது. எனவே உடனடியாக மின்கம்பியை சரிசெய்து விபத்தை தடுக்க வேண்டும்  என  அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே அப்பகுதி மக்கள் மானூர் மின்வாரிய  அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

Tags :
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது