×

பெரியபாளையம் பிடிஓ அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை, ஜூலை 19:  பெரியபாளையம் பிடிஓ அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகி கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகி சந்திரா, பூண்டி ஒன்றிய துணைத்தலைவர் பிரவினா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமி, பொருளாளர் உமாராணி, இணைச்செயலாளர் பரமேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் முகுந்தன், ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு பேசினர்.‘’துறை சார்ந்த பணி தவிர மாற்றுப்பணியில் ஈடுபடுத்த கூடாது, மத்திய அரசு அறிவித்த கூடுதல் சம்பளத்தை வழங்க வேண்டும், சட்டப்படியான ஓய்வூதியம் 3500 வழங்க வேண்டும், 10 வருடம் பணி முடித்த பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், பணிமூப்பு அடிப்படையில் அரசு புதிதாக தொடங்கும் எல்.கே.ஜி வகுப்புகளுக்கு பயிற்சி பெற்ற தகுதியுடைய பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். பணிக்கொடை 5 லட்சம் வழங்க வேண்டும், 5 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே, காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும்’’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வினோதினி நன்றி கூறினார்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்