×

அரசு பஸ் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு


திருவள்ளூர், ஜூலை 19: திருவள்ளூரில் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூரில் இருந்து ராமஞ்சேரி நோக்கி நேற்றுமுன்தினம் மாலை அரசு டவுன் பஸ் தடம் எண், டி52 சென்றுகொண்டு இருந்தது. பஸ்ஸை டிரைவர் பாபு ஓட்டிச்சென்றார். நடத்துனராக முத்து பணியில் இருந்தார். புல்லரம்பாக்கம் அருகே சென்றுகொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசிவிட்டு தப்பி ஓடினர். இதில், பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, கல் வீசி, பஸ்சின் கண்ணாடியை உடைத்துச் சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக கல்வீசி தாக்குதல் நடத்தினர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...