×

திருவள்ளூர் அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து ஆய்வாளருக்கு எலும்பு முறிவு

திருவள்ளூர், ஜூலை 19: திருவள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போலிஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. அவர் ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயவேல்(48). இவர்,  பொன்னேரி அருகே கடலோரப் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருத்தணியிலிருந்து பொலீரோ வாகனத்தில் நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டார்.வாகனத்தை காவலர் அருண்குமார் ஓட்டி வந்தார். திருவள்ளூர் அருகே சிறுவானூர் என்ற இடத்தில் வரும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிர்பாராதவிதமாக, சாலையோரம் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்கு உள்ளானது.இதில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயவேலுக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.  டிரைவர் அருண்குமாருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, இருவரையும் மீட்டு சிகிச்சைக்கென திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜெயவேல், மேல் சிகிச்சைக்கென சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...