ஒருவர் கைது உழவர் கடன் அட்டை உதவியுடன் ரூ.3 லட்சம் வரை கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தஞ்சை, ஜூலை 19: தஞ்சை மாவட்டத்தில் உழவர் கடன் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை விவசாயிகள் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வங்கிகள் மூலம் கிசான் கிரெட் கார்டுகள் (உழவர் கடன் அட்டைகள்) வழங்கப்படுகின்றன. இந்த கடன் அட்டை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த கடன் அட்டைகளை விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கும், கால்நடை வளர்ப்புக்கும், மீன் வளர்ப்புக்கும் பெற்று கொள்ளலாம். பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து மூலதனத்தின் அளவுக்கேற்ப கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் ஈட்டுறுதி இல்லாமல் ரூ.1.60 லட்சம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் கடன் பெற்று கொள்ளலாம். இந்த கடன் அட்டையின் கால அளவு 5 ஆண்டுகளாகும். இந்த அட்டைகள் மூலம் கடன் பெற்று உரிய தவணை காலத்தில் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீதம் மட்டுமே சலுகை வட்டி தொகையாக வசூலிக்கப்படுகிறது. எனவே உழவர் கடன் அட்டை பெற விருப்பம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து கொண்டு அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், நில ஆவணங்கள் போன்ற ஆவணங்களை சமர்பித்து கடன் அட்டையை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: