×

அரிமளம் அருகே மணல் கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்

திருமயம்,ஜூலை 19: அரிமளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் உள்ள பாம்பாற்றில் இரவு நேரங்களில் அதிகளவு மண் லாரி மூலம் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்தனர்.இந்நிலையில் கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் மோகன், அரிமளம் எஸ்.ஐ மேகநாதன் தலைமையில் போலீசார் நேற்று இரவு அரிமளம் அருகே உள்ள கே.செட்டிபட்டி பகுதி பாம்பாறு பகுதியில் பதுங்கி இருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஆறுகளில் வாகனங்கள் நுழைவதை கண்ட போலீசார் பதுங்கியிருந்து மண் அள்ளும் இடத்தில் ஒரு டிப்பர் லாரி, டிராக்டர்,ஜேசிபி இயந்திரத்தை மடக்கி பிடித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மணல் கொள்ளையர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து அரிமளம் போலீஸ் ஸ்டேசனுக்கு எடுத்து சென்று வாகன உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா