×

அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவியில் இந்தி, ஆங்கில வார்த்தை

புதுக்கோட்டை, ஜூலை 19: புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள சில அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவில் தமிழுக்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகள் உள்ளது தமிழ்ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை பயோ மெட்ரிக் கருவிகளின் மூலம் பதிவு செய்யும் முறையை பள்ளி கல்வித்துறை நடைமுறைப்படுத்தியது.
இந்த கருவியில் ஆசிரியர்கள் விரல் ரேகை பதிவு மூலம் தங்கள் வருகையை பதிவு செய்து வந்தனர். இந்த கருவியில் இதுநாள் வரை ஆங்கில வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்று இருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக அப்டேட் செய்யப்பட்டது. இதில் தமிழுக்கு பதிலாக இந்தி வார்த்தைகள் மற்றும் ஆங்கில வார்த்தைகள் இணைத்து பயோமெட்ரிக் கருவியில் இடம்பெற்று உள்ளன. இது ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது