×

தனி மாவட்டம் கோரி மயிலாடுதுறையில் இன்று கடையடைப்பு

மயிலாடுதுறை, ஜூலை 19: மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் . இதற்கிடையே நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் உதயகுமார் மேலும் இரண்டு புதிய மாவட்டங்களை அறிவித்தார். மயிலாடுதுறை மக்கள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு வராத காரணத்தால் மயிலாடுதுறையை இந்த அரசு புறக்கணிக்கிறது என்று நேற்று இரவு மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் அனைத்துக் கட்சியினர் வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் இன்று (19ம் தேதி)ஒரு நாள் முழுவதும் கடையடைப்பு செய்வது என்றும் மனித சங்கிலி போராட்டம் மேலும் வர்த்தக சங்கத்தினர் தமிழக அரசை அணுகுவது என்பது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். அனைத்து வர்த்தக சங்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள், திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், விசி கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...