ஆற்காடு, ஜூலை 19: ஆற்காடு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாடு படுகாயமடைந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(28), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே தனக்கு சொந்தமான மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென வெடிச்சத்தம் கேட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராஜ் அங்கு சென்று பார்த்தார். அப்போது, மாடு தாடை கிழிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தது. இதையடுத்து, மாட்டை உடனடியாக மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.