திருச்சியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜூலை 18: திருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. இது குறித்து கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை (19ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் 18 வயதிலிருந்து 35 வயதுக்குள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் கலந்துகொள்பவர்கள் டிசி, மார்க்சீட், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: