சேலம், ஜூலை 18: மேட்டூர் அரசு ஐடிஐ.,யில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிரிவில், பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இதில், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ், கம்மியர் குளிர்சாதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் பிரிவு புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் உள்ள தற்காலிக பயிற்றுநர் பணிக்கு, மாதம் ₹20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன், 2 வருட காலம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சிஐடிஎஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியாகி இருப்பதுடன், 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.