வாழப்பாடி அருகே டூவீலர் திருடிய வாலிபர் கைது

வாழப்பாடி, ஜூலை 18: வாழப்பாடி அருகே சிங்கபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் தியாகராஜன்(47). இவர் தனது டூவீலரில் மின் மோட்டார் பழுது பார்க்க வேண்டி, ஊராட்சி அலுவலகத்திற்கு மதியம் வந்தார். பின்னர் எதிரே உள்ள இடத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். அரைமணி நேரம் கழித்து மோட்டாரை சரி செய்து வந்த போது, டூவீலரை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து வாழப்பாடி போலீசில் தியாகராஜன் புகார் செய்தார். இதன் பேரில் எஸ்ஐ கிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அதில் அதே பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவர் டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது.  இதை தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த சடையனை போலீசார் கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: