×

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹7 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, ஜூலை 18: திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நேற்று முன்தினம் ₹7  லட்சத்துக்கு எள் மற்றும் பருத்தி ஏலம் நடை பெற்றது.நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் எள் மற்றும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. ஆத்தூர், சின்னசேலம், கெங்கவல்லி, பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 25 மூட்டை எள் மற்றும் 250 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய பவானி. அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, சுமார் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ரகசிய முறையில் ஏலத்தை நடத்தினர். இதில், கருப்பு எள் கிலோ ₹104.90 முதல் ₹122.90 வரையும், சிகப்பு எள் கிலோ ₹116.90 முதல் ₹126.90 வரையும் விற்பனையானது. தவிர, பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,589 முதல் ₹6,009 வரையும், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,059 முதல் ₹6,559 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 25 மூட்டை எள் ₹2.5 லட்சத்துக்கும், 250 மூட்டை பருத்தி ₹4.5  லட்சத்துக்குமாக மொத்தம் ₹7 லட்சத்துக்கு ஏலம் நடந்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா