×

விரிக்சா குளோபல் பள்ளியில் மாணவ பிரதிநிதிகளை பணியமர்த்தும் விழா


திருச்செங்கோடு, ஜூலை 18: திருச்செங்கோடு விரிக்சா குளோபல் பள்ளியில்,  8ம் ஆண்டு மாணவ பிரதிநிதிகளை பணியமர்த்தும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். முன்னதாக, கல்விக்குழு, விளையாட்டு குழு, கலை பண்பாட்டு குழு போன்ற பல்வேறு அமைப்புகளுக்கான மாணவ பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் ஜீவானந்தம் கலந்து கொண்டு, தேசியக்கொடியேற்றி வைத்துப் பேசினார். மாணவ பிரதிநிதிகளுக்கு தாளாளர் ஹரிநிவாஸ் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர், பேட்ஜ் அணிவித்து பணியில் அமர்த்தினர். தொடர்ந்து மாணவ பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதல்வர் யாமினி ராதாகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில், இயக்குனர்கள் மாலதி ராஜசேகரன், நிவேதா  ஹரிநிவாஸ், நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாரி, விளையாட்டு அலுவலர் எர்னஸ்ட் ஆகியோர் பங்கேற்றனர். சின்மயி நன்றி கூறினார்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு