×

புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஜூலை 18: நாமக்கல் அடுத்த புதன்சந்தையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ஆடு வளர்ப்போர் ஆடு, கிடா மற்றும் குட்டிகளை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். ஆடி மாதம் பிறந்துள்ளதால், நேற்று கூடிய சந்தைக்கு அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ₹4,800க்கு விற்பனையான 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு, இந்த வாரம் ₹5 ஆயிரத்துக்கும், ₹4,600க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு ₹4,700க்கும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குட்டி ஆடு மற்றும் கிடா குட்டி ஆகியவை ₹1,100க்கும் விற்பனையானது

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி