×

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரியில் நாளை (19ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் விருப்பமுள்ள வேலையளிப்பவர்களும், வேலை நாடுநர்களும் கலந்துகொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (19ம் தேதி) காலை 10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பங்கேற்க 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் நர்சிங் படித்தவர்கள் பங்கேற்கலாம். 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இதில் பங்கேற்கலாம். இத்தகுதியுடைய பணிநாடுநர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் அனைத்து கல்வி சான்றுகளின் நகல்களுடன், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது