×

பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடத்தை திறக்க வலியுறுத்தல்+

கடத்தூர், ஜூலை 18: கடத்தூர் அருகே புதுப்பட்டியில் மூடி கிடக்கும் சமுதாயக்கூடத்தை திறக்க ேவண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.கடத்தூர் அருகே ஒசஅள்ளி ஊராட்சி புதுப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே அதிகம் செய்து வருகின்றனர். இவர்களது வீடுகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த ேபாதுமான இடவசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த 2013-2014ம் ஆண்டு ₹17.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்தும், இன்று வரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால், மக்கள் தனியார் திருமண மண்டபத்தையே நாடி செல்ல ேவண்டியுள்ளது. எனவே, இந்த சமுதாயக்கூடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா