×

மெகா சூதாட்டம் ரூ.2.60 லட்சம் பறிமுதல்


உடுமலை, ஜூலை 18: மடத்துக்குளம்  ஒன்றியம் மைவாடி அருகேயுள்ள மாரிமுத்து என்பவர் தோட்டத்தில் பணம் வைத்து மெகா  சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சிறப்பு காவல் படையினர் நேற்று அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.2  லட்சத்து 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21 பேரும் கைதாகி, ஜாமீனில்  விடுவிக்கப்பட்டனர்.



Tags :
× RELATED சட்ட பணிகள் குழுவுக்கு சட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்