×

திருப்பூர் பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பை பறிமுதல்

திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் மாநகரப் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்பவர்களிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராத நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உத்தரவின் பேரில், சுகாதார அதிகாரி பிச்சை உள்ளிட்ட அதிகாரிகள் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 12 கடைகளில் நடத்திய சோதனையில் 5 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடை உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...