மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண் திருத்த சிறப்பு முகாம்

திருப்பூர், ஜூலை 18: மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு செய்வது தொடர்பாக சிறப்பு முகாம்  வரும் சனிக்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் இதுவரை மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு செய்யாத 5 வயதிற்குட்பட்ட மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் அசல் ஆதார் அட்டை மற்றும் அசல் மின்னணு குடும்ப அட்டையை கொண்டு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.  

 இதுவரை ஆதார் எடுக்காத 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் குழந்தைகளின் அசல் பிறப்புச்சான்று மற்றும் பெற்றோரது ஆதார் அட்டையுடனும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டையுடன் ஆஜராகி புதிய ஆதார் அட்டை எடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பழனிசாமி செய்திகுறிப்பில் கூறியுள்ளார்

Related Stories: