×

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் கடைக்காரர் கைது

வத்திராயிருப்பு, ஜூலை 18: வத்திராயிருப்பில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கடைக்காரரை கைது செய்தனர். வத்திராயிருப்பு எஸ்.ஐ.,செல்லப்பாண்டியன் மற்றும் போலீசார் மதுவிலக்கு  மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, வத்திராயிருப்பில் உள்ள தெற்கு அக்ரஹார தெருவில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் ஆனந்த் (52) என்பவரின் கடையில், ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...