×

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சாத்தூர், ஜூலை 18: விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திலீப்குமார் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பாண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் சேருவதற்கு ஜூலை 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அந்த கால கெடுவுக்குள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 1.6.2019 அன்று 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை. இந்த பட்டப்படிப்பு வகுப்பு 36 வாரம் நடைபெறும். இதில் சேர விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை, முதல்வர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், எஸ்ஆர் நாயுடு நகர், சாத்தூர் என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04562-260293, 97906 75728, 97883 61413 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...