×

தடுப்பணை அமைக்க கோரிக்கை

சிவகாசி, ஜூலை 18: சிவகாசி ஆர்டிஓ அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆர்டிஓ தினகரன் தலைமை வகித்தார். இதில், சிவகாசி வட்டாரப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்டிஓ பேசுகையில், ‘நூறு சதவீத மானியத்தில் விவசாய நிலங்களில் மழைநீர் சேகரிப்பு, பண்ணைக்குட்டை அமைப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், ‘வாடியூர் ஓடையில் தடுப்பணை அமைக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இக்கூட்டத்தில் விவசாயத்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...