×

விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு பயிற்சி

ராஜபாளையம், ஜூலை 18: ராஜபாளையத்தில் உள்ள கால்நடை துறை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில், விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்த ஒரு வாரப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள 18 முதல் 40 வயது உடையவராக இருக்க வேண்டும். பயிற்சி முடித்தவர்களுக்கு கால்நடை துறை பல்கலைக்கழகத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் முதல் வாரம் பயிற்சி தொடங்கும். இதில் கலந்து கொள்ள, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED பணம் திருடியவர் கைது