×

தியாகிகள் தினம் அனுசரிப்பு

விருதுநகர், ஜூலை 18: இந்தியாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிரை நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாள் (ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல, ஜூலை 17ம் தேதியை தமிழக தியாகிகள் தினமாக தமிழக அரசு கடைப்பிடிக்கிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நேற்று தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனடிப்படையில், விருதுநகர் கல்லூரி சாலையில், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றக்கோரி, உண்ணாவிரதமிருந்து, உயிர் நீர்த்த சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனாரின் நினைவிடத்தில், நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல்ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை