×

உத்தமபாளையத்தில் தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம், ஜூலை 18: உத்தமபாளையத்தில் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.உத்தமபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நிறுவனதலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். போராட்ட குழு தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் ராமய்யா, பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது, மேலச்சொக்கநாதபுரம் விற்பனையாளரின் இடைநீக்க உத்தரவினை ரத்து செய்ய வேண்டும். சிலமலை கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இச்சங்கத்தில் விவசாயிகளின் நகைகளை வாபஸ் செய்ய வசதியாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெற்று வைத்துள்ள நகைகடன், பெட்டக சாவியை தர வேண்டும். மீனாட்சிபுரம் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு  நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். கொட்டக்குடி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பணியாளரை நிர்வாகம்  திரும்ப பணி அமர்த்தி வழங்கி உள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜூலை 22ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளின் பணியாளர்களும் ஒட்டு மொத்த சிறுவிடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதில் துணைத்தலைவர்கள் பழனிசாமி, ரவி, மாவட்ட இணைச்செயலாளர்கள் ஜெயகுமார், அமைதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு