×

சின்னமனூரில் துணைக்கால்வாய் கட்டுமான பணிகள் மறு ஆய்வு தேவை

சின்னமனூர், ஜூலை 18: சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை சாலையில் துணைக்கால்வாய் கட்டும் பணியை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னமனூரிலிருந்து போடி மாநில நெடுஞ்சாலையில் மார்க்கையன்கோட்டை 3 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த குறுகிய சாலையில் ஐந்து குறுகிய பாலங்கள் இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியோடுயால் விபத்தும், உயிர்பலியும் நடந்து வருகிறது.  இதனைத் தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ரூ. 1.81 கோடி மதிப்பீட்டில் நான்கு பாலங்களை விரிவாக்கம் செய்யவும், புதிய பாலம் கட்டும் பணியும் ஒன்றரை மாதங்களாக நடந்து வருகிறது.இந்நிலையில் சின்னமனூர் விலங்கையா கோயில் அருகிலுள்ள குறுகிய பாலம் விரிவாக்கம் பணியும் நடக்கிறது. சின்னமனூர் 27 வார்டுகளிலிருந்து கிளம்பும் ஒட்டு மொத்த சாக்கடைநீர், மழை நேரங்களில் புதியதாக கட்டப்பட்ட அகன்ற வாறுகாலில் வேகமாக கடக்கும் போது அந்த பாலத்தின் அடித்தளத்தை  உடைக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பணிகளை மறு ஆய்வு செய்து  தண்ணீர்  பாலத்தில் மோதாமல் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தேனி தொகுதியில் சிவிஜில் செயலி மூலமாக 24 புகார்கள் மீது விசாரணை