×

கொள்ளை சம்பவங்களை தடுக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கேமரா பொருத்த வேண்டும் போலீசார் உத்தரவு

திருப்புவனம், ஜூலை 18: திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என டிஎஸ்பி கூறியுள்ளார்.திருப்பாச்சேத்தியில் திருப்புவனம், பழையனூர், பூவந்தி வட்டார தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், போலீசார் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் கலந்து கொண்டார். பூவந்தி, திருப்புவனம், பழையனூர், மானாமதுரை காவல்நிலைய எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். கூட்ட முடிவில் டிஎஸ்பி கார்த்திகேயன் கூறுகையில், கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் அலாரம் பொருத்தப்பட்டு அவைகள் ஹலோ போலீஸ் மற்றும் அந்தந்த போலீஸ் நிலைய போன்களுடன் இணைக்கப்பட வேண்டும், அலாரம் பயன்பாட்டில் உள்ளதா என அடிக்கடி சோதனை நடத்த வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் திடகாத்திரமான ஆட்களை காவலர்களாக நியமிக்க வேண்டும், கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் அந்தந்த பகுதி போலீஸ் நிலைய உயர் அதிகாரிகளின் செல்போன் எண் உள்ளிட்டவற்றை தகவல் தொடர்பிற்கு வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா